தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் தான் போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணி என்றபோதும் தனி சின்னத்தில் சுயேட்சையாக ஓபிஎஸ் போட்டியிடவுள்ளார்.
தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க, பரீட்சார்த்த முயற்சியாக இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாக வியாழக்கிழமை நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும், இரட்டை இலை சின்னத்திற்காக சட்டப்போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.