தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
“தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 மூன்றாம் பாலினத்துவரும் அடங்குவர். முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.90 லட்சம்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் பறக்கும் படையினரால் நேற்றுவரை ரூ. 33.31 பணம், ரூ.33.35 கோடி மதிப்பிலான நகைகள், ரூ. 1.72 கோடி மதிப்பிலான மதுபானங்கள் உள்பட மொத்தம் ரூ.69.70 கோடி மதிப்பில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்?

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த ஆலோசனை: ஞானேஷ் குமார்

தமிழகத்தில் நியாயமான, வெளிப்படையான தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி

1,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக தோ்வு முறை: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

