திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பனி சாரல் மழை பெய்தது.

News image
கோப்புப்படம்
Updated On :8 மே 2024, 3:16 am

DIN

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.6 முதல் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய 4-ஆவது நாளில் சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பனி சாரல் மழை பெய்தது.

கோடை வெயில் வாட்டி வந்த நிலைய.வந்த நிலையில், இந்த திடீர் பனி மழையால் வெப்பம் சற்று தணிந்து லேசான குளிர்ந்த காற்று வீசியது.

தமிழக உள் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 8-11) வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும். அதன்படி, 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவும்.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 105 முதல் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், இதர மாவட்டங்களில் 102 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 96.8 முதல் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் புதன், வியாழன் (மே 8,9) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 9) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட பகுதிகளிலும், செஞ்சியிலும் காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.