பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதினம்!

சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள்-ஹேமாஸ்ரீ

Published On :

சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதீனம் மகாலிங்க சுவாமி பதிவு திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளார்.

திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசி பரமாச்சாரியார் சுவாமிகள், கர்நாடக மாநிலத்தில் ஹேமாஸ்ரீ(47) என்பவரை திருமணம் செய்துள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆதீனங்கள் இல்லறம் தவிர்த்து துறவறம் மேற்கொண்டவர்கள்.

Story image

சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டற்கான சான்றிதழ்.

ஆதீனம் மகாலிங்க சுவாமி பதிவு திருமணச் சான்றிதழ்

ஆதீனம் மகாலிங்க சுவாமி பதிவு திருமணச் சான்றிதழ்

இந்த நிலையில், துறவறம் மேற்கொண்டிருந்த சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசி பரமாச்சாரியார் சுவாமிகள்(54) தற்போது 47 வயதுடைய ஹேமாஸ்ரீ என்பவரை கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி பதிவு திருமணம் செய்துகொண்டதாக வரும் தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடகாவில் சிவாக்கிர யோகிகள் மடம் தொடங்குவதற்காக இடம் கொடுத்த ஹேமாஸ்ரீ என்பவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான பதிவு சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

ஹேமாஸ்ரீ மடத்தை நிர்வகிக்கவும், டிரஸ்டியாக செயல்படுவதற்கு ஏதுவாக பதிவு திருமணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது:

கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது உண்மைதான. கர்நாடக மாநிலத்தில் சைவ மடம் இல்லை. அங்கு சைவ மடம் அமைப்பதற்கு ஹேமாஸ்ரீ இடம் அளித்தார். அவரையே அந்த மடத்தின் செயலாளராக(டிரஸ்டி) நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும், சூரியனார் கோவில் ஆதினம் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும், கர்நாடக மாநில சைவ மடத்தின் செயலராக தனது மனைவி ஹேமாஸ்ரீ இருப்பார் என மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.