முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்...

News image

பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.

Updated On :10 நவம்பர் 2024, 11:29 am IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பார்வையாளர்களின் சுவாரசியத்தைத் தூண்டும் வகையில் கடந்த வாரம் வைல்டு கார்டு மூலம் 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ராயன், ராணவ், நாகப்பிரியா, வர்ஷினி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தனர்.

கடந்த வாரம் யாரும் வெளியேறாத நிலையில், இந்த வாரம் நடனக் கலைஞர் சுனிதா வெளியேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 20 போட்டியாளர்கள் உள்ளனர். வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஆட்டத்தை மாற்ற ஆரம்பித்துள்ளதால், நிகழ்ச்சி விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.