
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் .
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியான இவர் அந்த குதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் விவசாய பணிக்காக சென்றார்.
இதையும் படிக்க | ரூ.70,890 சம்பளத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில், புதன்கிழமை காலை அந்த பகுதியில் மிதமான மழை பெய்தது. அப்போது, தொழிலாளி தங்க ராஜா மின்மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் கசிந்து அவர் மேல் பாய்ந்தது. இதில் தங்க ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
வீர கேரளம் புதூர் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.