மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சாவூர்: மண் அரிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம்!

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:43 am

DIN

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியான கீழத்தோட்டம் கடல் பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியான கீழத்தோட்டம் கடல் பகுதியில் நேற்றிலிருந்து இன்று(நவ. 27) காலை வரை எந்த அலையும் காற்றும் இல்லாமல் குளம்போல் காட்சி அளித்த நிலையில், தற்போது அதிவேக காற்று வீசத் துவங்கியதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் கரையோரம் உள்ள மணல் திட்டுக்களில் கிட்டத்தட்ட 5 அடி மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் சீற்றத்தால் தற்போது கடல் நீர் வெளியேறி துறைமுகச்சாலை வரை நிரம்பி காணப்படுகிறது.

இதேநிலை நீடித்தால் இந்த கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை வழக்கம்போல நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று அங்கு பாதுகாத்து வைத்துள்ளனர். மேலும் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.