சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நாளைமுதல்(நவ. 29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கிய நகர்ந்து வருவதால், நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இருப்பதற்கு அதன் நகர்வில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தை நோக்கி நகா்கிறது புயல் சின்னம்
இந்த நிலையில், வானிலை நிலவரங்களை தன்னுடைய சமூக வலைதளப் பதிவின் மூலம் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
டெல்டா முதல் சென்னை வரை இன்று(நவ. 28) பகல் மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளுமையான சூழலை அனுபவியுங்கள்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(நவ. 29) மற்றும் நாளைமறுநாள்(நவ.30) பலத்த மழை பெய்யும்.
டிச.1 மற்றும் டிச. 2 ஆகிய தேதிகளில் முழுமையான மழையை பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை ஆகிய பகுதியில் கோடை மழை

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


