திருச்சி வந்த விமானத்தின் தண்ணீர் குழாய்களில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்
திருச்சி வந்த விமானத்தின் தண்ணீர் குழாய்களில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானத்தின் தண்ணீர் குழாய்களில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ. 13.69 லட்சம் மதிப்பிலான தங்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவின் கோலாம்பூரில் இருந்து புதன்கிழமை இரவு வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலா்கள் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா்.
இதையும் படிக்க | மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் அடையாள அட்டை: தெற்கு ரயில்வே தகவல்
இதில், விமானத்தின் தண்ணீர் குழாய்களுக்குள் மறைத்து 180 கிராம் தங்க கட்டியைக் கடத்திக்கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சுங்கத் துறையினா் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.13.69 லட்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...