மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடரும்!

வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்.

News image

இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு - Din

Updated On :1 அக்டோபர் 2024, 3:43 am

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

உதகையில் முறையான சாலைகளோ, மேல்பாலங்களோ இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

இ-பாஸ் நடைமுறையால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, தங்கும் விடுதிகளின் கூடுதல் கட்டணம், தண்ணீா்ப் பிரச்னை இவை எல்லாம் கட்டுக்குள் வரும் என்பதால், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.