ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு

தொழிலதிபர் விஜய் டாடா அளித்த புகாரின் பேரில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News image
மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி
Updated On :4 அக்டோபர் 2024, 7:02 am

DIN

பெங்களூரு: தொழிலதிபர் விஜய் டாடா அளித்த புகாரின் பேரில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான விஜய் டாடா பெங்களுரு போலீசாரிடம் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதில், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் ரமேஷ் கவுடாவின் தொலைபேசி வாயிலாக, குமாரசாமி தன்னிடம் பேசியதாகவும், அப்போது,

சென்னப்பட்னா இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி தேர்தல் செலவுக்காக தனக்கு ரூ.50 கோடி தர வேண்டும், இது அவரது வெற்றிக்கு அவசியம் என்று குமாரசாமி கூறினார்.

அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியபோது, கோபமடைந்த குமாரசாமி,பணம் தராவிட்டால் நான் என்ன செய்வேன் என்று தெரியாது, பெங்களூருவில் நீ பிழைப்பது கடினம் என குமாரசாமி மிரட்டியதாகவும், மேலும், கோயில், பள்ளிக்கூடம் கட்டுவதாகக் குறிப்பிட்ட ரமேஷ் கவுடா, அந்தத் திட்டங்களுக்கு ரூ. 5 கோடி கேட்டு மிரட்டியதாகவும், இந்தப் பணத்தைத் தராவிட்டால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார் எனவிஜய் டாடா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது மிரட்டி பணம் பறித்தல், உயிருக்கு அச்சுறுத்தல் என 2 பிரிவுகளின் கீழ் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.