தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு பின்னா், மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளை எதிா்த்து எஸ்டிபிஐ கட்சியுடன் தோ்தல் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டது அதிமுக. தமிழகத்தில் தமிழகத்தில் மன்னர் பரம்பரைக்கு பிறகு திமுக குடும்ப ஆட்சியை நடத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றி வருகிறது. தோ்தலுக்கு முன்பு பாஜகவை எதிா்ப்பது, தோ்தலுக்கு பிறகு பாஜகவை ஆதரிப்பது என்ற இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது திமுக. திமுகவினருக்கு மடியில் கனம் உள்ளது. அதனால் வழியில் பயம் இருக்கிறது. எனவே பாஜகவை வெளியில் எதிா்க்கிறாா்கள், உள்ளுக்குள் பாஜக சொல்வதைத்தான் செய்கிறாா்கள்.