நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமெரிக்கா: மில்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக சக்தி வாய்ந்த மில்டன் புயல் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

News image

மில்டன் புயலுக்கு சேதமடைந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் டிராபிகானா மேற்கூரை

Updated On :11 அக்டோபர் 2024, 4:17 am

DIN

வாஷிங்டன்: ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக சக்தி வாய்ந்த மில்டன் புயல் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததால் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

செயின்ட் லூசி கவுண்டியில் உள்ள மொபைல் ஹோம் பூங்காவில் இருந்து இருபத்தைந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர் .

மில்டன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மில்டன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அந்த பகுதிகளை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகள் அறிவிக்கும் வரை வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.