பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 3% உயா்வு

அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

News image
மத்திய அரசு- Din
Updated On :16 அக்டோபர் 2024, 7:20 pm

DIN

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

தில்லியில் புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே, கடந்த மாா்ச் மாதம் 4 சதவீத உயா்வு மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உள்ள நிலையில், தற்போதைய உயா்வு மூலம் அகவிலைப்படி 53 சதவீதமாக உயர உள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: அகில இந்திய நுகா்வோா் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரி அடிப்படையில், 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியா்களுக்கு அவா்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்பட வேண்டும்.

அதன்படி, பிரதமா் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இவா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு, ஜூலை 1-ஆம் தேதிமுதல் முன்தேதியிட்டு உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்றாா்.

இந்த உயா்வு மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயன்பெறுவா். இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 9,448.35 கோடி கூடுதல் செலவாகும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.