மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், நீண்டகாலமாக தங்களின் ஊதிய கட்டமைப்பில் திருத்தம்கோரி வந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்வகையில், தில்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி (Dearness Allowance - டியர்னெஸ் அலோவென்ஸ்) உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியதார்களுக்கும் அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், ஓய்வூதியதார்களின் ஓய்வூதியமும் அதிகரிக்க உள்ளது.
இந்த அறிவிப்பு, தற்போதைய 58 சதவிகித அகவிலைப்படி விகிதத்தை 60 சதவிகிதமாக உயர்த்துகிறது.
அகவிலைப்படி, பொதுவாக பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை, விலைவாசி உயர்வின் தாக்கத்தை சரிசெய்யும் பொருட்டு, அரசு ஊழியர்களின் வருமானத்தை பொருளாதார நிலைக்கேற்ப சீரமைக்கப்படுகிறது.
அடிப்படை ஊதியம், நீண்ட காலத்துக்கு மாறாமலிருக்கும் நிலையில், அகவிலைப்படி உயர்வு மூலம் வருமான உயர்வு கிடைக்கிறது. இந்த வருமான உயர்வு மூலம் விலைவாசி உயர்வின் தாக்கத்தை ஈடுகட்ட முடியும்.
Summary
Union Cabinet approves 2% increase in Dearness Allowance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள்: மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆய்வு

எல்பிஜி சிலிண்டர் விலையேற்றம் தவிர்க்க இயலாதது - மத்திய அரசு
மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் தீ விபத்து!

உரம் விலை உயர்வு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



