தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய தில்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தில்லி தீயணைப்புத் துறைக்கு காலை 9.37 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 8 வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை நேரம் என்பதால் இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, காயமோ ஏற்படவில்லை.
இதுவரை தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தில்லி காவல்துறையினரும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் குளறுபடி என அடுத்தடுத்து பிரச்னைகளில் மத்திய கல்வி அமைச்சகம் சிக்கி வரும் நிலையில், இந்த தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Fire at the Union Ministry of Education building!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூர் தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு வினாத் தாள் மதிப்பீடு விவகாரம்: கல்வி அமைச்சக அதிகாரிகள் ஜூன் 2-இல் ஆஜராக நாடாளுமன்றக் குழு சம்மன்

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை- சுகாதார அமைச்சக அதிகாரிகள்

மும்பையில் 16 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


