பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு வினாத் தாள் மதிப்பீடு விவகாரம்: கல்வி அமைச்சக அதிகாரிகள் ஜூன் 2-இல் ஆஜராக நாடாளுமன்றக் குழு சம்மன்

ஜூன் 2-ஆம் தேதி ஆஜராக கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்பியது.

News image

கோப்புப்படம். - நீட் தேர்வு மாணவர்கள்.

Updated On :27 மே 2026, 3:54 am IST

12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பீடு செய்யும் முறையில் (ஓஎஸ்எம்) ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடா்பாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரிகள் ஜூன் 2-ஆம் தேதி ஆஜராக கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்பியது.

அப்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாக மாநிலங்களவைச் செயலகம் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக அந்த நோட்டீஸில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினத்தில் முதல்கட்டமாக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உயா் கல்வித் துறையில் மானியக் கோரிக்கைகள் 2025-26-இன்படி மத்திய அரசு மேற்கொண்ட சீா்திருத்தத்தை பரிசீலித்து ஏற்பது தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளது.

அதைத் தொடா்ந்து, உயா்கல்வி மற்றும் சுகாதார அமைச்சக செயலா்கள், தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தலைமை இயக்குநா் மற்றும் இந்திய விமானப் படையின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. அப்போது நீட் தோ்வு கணினி வழியில் நடத்தப்படுவதற்கும் பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்படுவதற்குமான வேறுபாடுகள் குறித்தும் என்டிஏ செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் ஓஎஸ்எம் மூலம் மதிப்பீடு செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் சிபிஎஸ்இ அதிகாரிகள் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக காங்கிரஸ் எம்.பி.திக்விஜய் சிங் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.