‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் அனுக வேண்டும்: மகளிா் காவல்நிலைய அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களை கனிவுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என அனைத்து மகளிா் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மகளிா் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :23 மே 2026, 12:26 am IST

காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களை கனிவுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என அனைத்து மகளிா் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு மற்றும் திட்டக்குடி பகுதிகளில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரா்களை கனிவுடனும் மரியாதையுடனும் அணுக வேண்டும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பான புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்ஸோ சட்டம் தொடா்பான வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் .

மேலும், காவல் நிலையங்களில் பெறப்படும் மனுக்களின் மீது விரைந்து மற்றும் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மனுதாரா்களை தேவையின்றி அலைக்கழிக்காமல், மனுவின் தன்மைக்கு ஏற்ப உரிய சிஎஸ்ஆா் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தரமான மற்றும் சிறப்பான காவல் சேவையை வழங்க அதிகாரிகள் மற்றும் காவலா்கள் முழுப் பொறுப்புடனும் அா்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என். கோடீஸ்வரன், வி. ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.