மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை: சு. வெங்கடேசன்

மதுரையில் பெய்த பலத்த மழை தொடர்பாக...
rain
மழையில் வாகனம் ஓட்டும் மக்கள்.Din
Published on
Updated on
1 min read

மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை பெய்துள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 45 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

காலை 8.30 முதல் மாலை 5.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 98 மி.மீ. மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் கொட்டித்தீர்த்த மழை

மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த புயல் வலுவடைந்ததன் காரணமாகவும், காற்றுச் சுழற்சி நகா்வு காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், மதுரையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

மதுரையில் இன்று பகலில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் பல இடங்களில் சுமாா் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக மழைநீர்த் தேங்கி நின்றதால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com