சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள அமானத்துல்லா கான் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தில்லி வக்ஃப் வாரியத் தலைவராக அமானத்துல்லா கான் இருந்தபோது, பணி நியமனத்திற்காகப் பணம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
முன்னதாக அமானத்துல்லா கான் வெளியிட்ட விடியோவில், "தன்னை கைதுசெய்து துன்புறுத்துவதே அமலாக்கத்துறை அதிகாரிகள் நோக்கம். சர்வாதிகாரியின் கட்டளையின் பேரில் என்னை கைது செய்ய வந்துவிட்டனர்” என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், அவர் தான் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் தனக்கான வழங்கும் என்றும் அமானத்துல்லா கான் தெரிவித்து இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓ-மண்டல குடியிருப்புகள் இடிப்பு நடவடிக்கையை எதிா்த்து சட்டப் பாதுகாப்பு கோரும் ஆம் ஆத்மி

நீா் பெறும் விவகாரத்தில் ஹரியாணா முதல்வருடன் தில்லி முதல்வா் ஒருங்கிணைப்பு: பாஜக

தீ விபத்து மீட்புப் பணிகள் தாமதம்: அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி வலியுறுத்தல்

விபத்துக்குள்ளான சாகேத் கட்டடத்துக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




