ஆசிரியர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஆசிரியர் நாள் வாழ்த்துகள். இளைய தலைமுறையினரை செதுக்கும் ஆசியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!
அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!

எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்: இணையக் குற்றப் பிரிவு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! மு.க. ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK




