மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவா்களையும் விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :29 செப்டம்பர் 2024, 4:47 pm

DIN

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அந்த கடிதத்தில், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 17 போ் ராமேசுவரம் மீன் பிடித்தளத்திலிருந்து இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் நெடுந்தீவு அருகே செப். 29-ஆம் தேதி இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த மீனவா்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவா்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவா்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த சிக்கலான பிரச்னையை தூதரக ரீதியாக தீா்க்க உறுதியான மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே தங்களிடம் வலியுறுத்தியுள்ளேன். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரை தில்லியில் செப். 27-இல் சந்தித்து சமா்ப்பித்த கோரிக்கைகளிலும் இதை வலியுறுத்தியுள்ளேன்.

எனவே, தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவா்களையும், அவா்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும் வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.