மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!

நேபாளத் தலைநகரில் மன்னராட்சி ஆதரவுக் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளதைப் பற்றி...

News image
நேபாளத் தலைநகரில் மன்னராட்சிக் கோரி மாபெரும் பேரணி நடைபெற்றது.
Updated On :8 ஏப்ரல் 2025, 12:00 pm

DIN

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சி ஆதரவுக் கட்சியினர் பேரணி நடத்தியுள்ளனர்.

நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி நிறுவி அந்நாட்டை ஹிந்து தேசமாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி ராஷ்டிரிய ப்ரஜந்தந்த்ரா கட்சியினர் (ஆர்.பி.பி.) தலைநகர் காத்மாண்டுவில் இன்று (ஏப்.8) பேரணி நடத்தினர்.

காத்மாண்டுவின் புறநகர் பகுதியில் ஆர்.பி.பி. கட்சித் தலைவர் ராஜேந்தர லிங்க்தனின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், தலைவர்கள் மற்றும் அந்தக் கட்சியின் தொண்டர்கள் என ஏராளமான மக்கள் முன்னாள் நேபாள அரசர் ஞானேந்திரா ஷாவின் படத்தை கையில் ஏந்தி பங்கேற்றனர்.

இந்தப் பேரணியில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க சுமார் 2,000 காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரணியின் போது ‘நாட்டின் சூழலை மாற்றியமைக்க மீண்டும் மன்னராட்சி அமைப்போம்’ மற்றும் ‘நேபாளத்தை மீண்டும் ஹிந்து தேசமாக மாற்றுவோம்’ என்று முழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி நிறுவ வேண்டும் எனக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன் 110-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.