நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ராட்சச பலூனால் 60 அடி உயரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஊழியர் பலி!

ராஜஸ்தான் ராட்சச பலூன் சோதனை ஓட்டத்தில் ஊழியர் பலியானதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2025, 12:35 pm IST

ராஜஸ்தானில் ராட்சச பலூன் சோதனை ஓட்டத்தில் ஏற்பட்ட விபத்தினால் ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பரான் மாவட்டத்தில் மூன்று நாள்களாக நடைபெற்ற திருவிழாவின் முடிவு நாளான இன்று (ஏப்.4) காலை ராட்சச பலூன் இயக்கப்பட்டுள்ளது. அப்போது, இன்று காலை 7 மணியளவில் அந்த பலூனை இயக்கும் நிறுவனத்தின் ஊழியரான வாசுதேவ் கத்ரி (வயது 40) என்பவர் அதன் ஒரு பக்கத்தின் கயிற்றை தனது கைகளில் பிடித்துள்ளார்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில் அந்த ராட்சச பலூன் காற்றி பறக்கத் துவங்கியுள்ளது. இதில், அந்த கயிற்றை பிடித்து கொண்டிருந்த வாசுதேவும் சுமார் 60 அடி உயரத்திற்கு வானில் தூக்கிச் செல்லப்பட்டுள்ளார். பின்னர், தீடீரென அந்தக் கயிறு அறுபட்டதினால் அவர் தரையில் விழுந்து படுகாயமடைந்துள்ளர்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் வாசுதேவை மீட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து அங்கு விரைந்த அம்மாநில காவல் துறையினர் வாசுதேவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, ராட்சச பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாசுதேவ் எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளது அங்குள்ளவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.