பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் ஜல்லிக்கட்டு விழா

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

News image
ஜல்லிக்கட்டுப்போட்டியை தொடங்கி வைத்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தெய்வானை.
Updated On :12 ஏப்ரல் 2025, 6:50 am

DIN

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை‌ சுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)தெய்வானை தொடங்கி வைத்தார். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 800 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 250 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.