மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆந்திரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

கைலாசபட்டணம் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

News image

கைலாசபட்டணம் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தரைமட்டமான அறைகள்.

Updated On :13 ஏப்ரல் 2025, 2:56 pm

DIN

ஆந்திரம்: ஆந்திரம் மாநிலம் கைலாசபட்டணத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 போ் பலியாகினர், 7 போ் காயமடைந்த நிலையில், இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஆந்திரம் மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், கைலாசபட்டணம் கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஒரு பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டதும் சம்பவ இடத்திற்கு ஒடிவந்த கிராம மக்கள், வெடிவிபத்தில் சிக்கி சிதறிக் கிடந்த உடல்கள்களை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், காயமடைந்த நிலையில் கிடந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் ஆலையின் பல அறைகள் இடிந்து தரைமட்டமானது.

பின்னர், கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியான இரண்டு பெண்கள் உள்பட 8 உடல்களை மீட்டனர். இதில், 7 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, காயமடைந்தவா்களுக்கு முறையான மருத்துவ வசதியை உறுதி செய்யுமாறு அமைச்சா் அனிதா மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளாா்.

பிதமர் நரேந்திர மோடி இரங்கல்

இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.