மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2025, 5:49 pm IST

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 36) மற்றும் அவரது மகளும் ஒப்பனைக் கலைஞருமான சதியா சுல்தானா (21) ஆகிய இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், பாபியா காத்தூனின் வங்கதேசத்தைச் சேர்ந்த கணவர் பிரிந்து சென்றதினால், கோஜா தொங்கா எல்லையின் வழியாகக் கடந்த 2007-ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறியுள்ளார். பின்னர், தில்லியிலுள்ள வீடுகளில் பணியாளர்களாக வேலை செய்து வந்த அவர், தனது மகளை ஒப்பனைக் கலைஞருக்காக பயிற்சிப் பெற வைத்துள்ளார்.

இதேபோல், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சதியா நிகேதன் சந்தை மற்றும் மோதி பாக் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ரபியுல் இஸ்லாம் (38) என்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த 2012-ம் ஆண்டு சட்டவிரோதமாக தில்லியில் குடியேறியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர், கடந்த 2016-ல் திரிபுரா எல்லை வழியாக நுழைந்த அவரது மனைவியான சீமா மற்றும் அவர்களது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2023-ல் தரகர் மூலமாக கத்வாரியா சராய் பகுதியில் குடியேறிய ரிஃபாத் அரா மொய்னா என்ற வங்கதேசப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரையும் நேற்று (ஏப்.17) வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட அதிகாரிகள் ஆஜர் படுத்தினர்.

வங்கதேசத்திலிருந்து தில்லியில் சட்டவிரோதமாக குடியேறும் அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் அம்மாநிலத்தின் சத்யா நிகேதன், கிஷங்கார் மற்றும் கட்வாரியா சராய் ஆகிய பகுதிகளில் வசித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.