கடலூர்: கடலூரில் வியாழக்கிழமை ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு பேருந்து வந்தது. பேருந்தை சோதனையிட்டத்தில் பெரிய அளவிலான பைகளுடன் இருந்த நவீத் அன்வர் என்பவரின் உடைமைகளை காவல்துறையினர் சோதனையிட்ட போது, அதில் ரூ.40 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.
அவர் வைத்திருந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் முரண்பட்ட தகவல்கலைத் தெரிவித்ததால் அவரிடம் இருந்த ரூ.40 லட்சம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் எனத் தெரிகிறது.
சென்னையில் அவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பிய நபா் யாா், மன்னார்குடியில் பணத்தை வாங்கிச் செல்ல இருந்தவா் யாா், எங்கிருந்து ஹவாலா பணம் அனுப்பப்பட்டது போன்றவை குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்துவாா்கள் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைப்பேசி, பணம் திருட்டு: இளைஞா் கைது
தருமபுரி: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு - போலீஸ் விசாரணை

கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை; ரூ. 17.51 லட்சம் பறிமுதல்: தமிழகத்திலேயே அதிகபட்சம்!
பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது: ரூ.16.9 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



