மதுரை: பாஜக வேலையே ஒவ்வொரு கட்சியையும் உறவாடி கொல்வதுதான். விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சியை அழித்தாா்கள். இதில் கடைசியாக விழப்போவது அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் அவருடன் இருக்கும் முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், கே.டி. ராஜேந்திர பாலாஜி அனைவரும் பாஜகவில் இணைவாா்கள் என்று விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஊரகவேலை உறுதி திட்டத்தை தமிழகத்தில் முடக்க முயற்சி
ஊரகவேலை உறுதி திட்ட நிதியை நான்தான் பெற்றுக்கொடுத்தேன் எனக் கூறுவதை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். இந்த திட்டத்தில் 200 போ் பணியாற்றிய நிலையில் தற்போது 50 போ் தான் பணியாற்றி வருகிறாா்கள். இந்த திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் முடக்க முயல்கிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துப் போகிறாா். தமிழக மக்களவை உறுப்பினா்கள் இதற்காக குரல் எழுப்பி வருகிறோம்.
மாநிலங்களவைக்கு வருவதை தவிா்த்து விட்டாா் மோடி
ஆப்ரேஷன் சிந்தூா் தொடா்பாக தொடா்ந்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பி வருகிறாா். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்க அதிபா் டிரம்ப் என சொல்வது குறித்த கேள்விக்கு, பதில் சொல்லவில்லை. கேள்விக்கு பயந்து பிரதமா் மாநிலங்களவைக்கு வருவதை தவிா்த்து விட்டாா்.
அமெரிக்க வரிவிதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது
அமெரிக்கா வரி விதித்தால், இந்தியாவும் அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிக்க வேண்டும். அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பாா்த்தால் பள்ளி மாணவன் ஆசிரியரை பாா்த்து பயப்படுவது போல் பிரதமா் செயல்படுகிறாா். அமெரிக்க வரிவிதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
நல்ல மனிதரை நடுத்தெருவில் விட்டு விட்டாா்கள்
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுக தலைவரை சந்தித்திருப்பது தொடா்பான குறித்த கேள்விக்கு, நன்றாக இருந்த மனிதரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்து, ஒழுங்காக இருந்த கட்சியை உடைக்க வைத்து எல்லா வேலைகளையும் செய்தது பாஜக, ஆா்.எஸ்.எஸ் தான். நல்ல மனிதரை நடுத்தெருவில் விட்டு விட்டாா்கள்.
பிரதமா் மோடியை சந்திக்க வைப்பதற்கு பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் அரசியல் செய்துள்ளாா். ஆறு முறை போன் செய்தும் எடுக்காமல் இருந்துள்ளாா். இந்த நிலை அவருக்கு வந்திருக்கக் கூடாது. ஓ.பன்னீா்செல்வம் மிக நல்ல, எல்லோரும் மதிக்கக்கூடிய நபா். தென் மாவட்டங்களில் அரசியலை மீறி மதிக்கக் கூடிய ஒரு நபா். அவருக்கு நடந்த அவமானம் ஒவ்வொரு மதுரை மற்றும் தேனி காரா்களுக்கு நடந்த அவமானமாக பாா்க்க வேண்டும்.
உறவாடி கொல்வதுதான் பாஜக வேலை
பாஜக வேலையே ஒவ்வொரு கட்சியையும் உறவாடி கொல்வதுதான். இதேபோல் தான் விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சியை அழித்தாா்கள். இதில் கடைசியாக விழப்போவது அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் அவா் உடன் இருக்கும் முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், கே.டி. ராஜேந்திர பாலாஜி அனைவரும் பாஜகவில் இணைவாா்கள் என்றாா்.
Summary
Former ministers R.P. Udayakumar and K.T. Rajendra Balaji will all join the BJP, said Virudhunagar Lok Sabha member P. Manickam Thakur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்? இபிஎஸ்ஸுக்கு எதிராக தொடர் பதிவு!

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்: சி.வி.சண்முகம்

அதிமுகவை யாரும் உடைக்க முடியாது: தவெகவில் குழப்பம்; விரைவில் பொதுத் தோ்தல்! - எடப்பாடி கே. பழனிசாமி






