
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: Apprenticeship
மொத்த காலியிடங்கள்: 1500
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு மற்றும் தகுதி ஆகியவை 1.7.2025 தேதியின் படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, மதுரை, சேலம்,திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை, விருதுநகர், தஞ்சாவூர்.
எழுத்துத்தேர்வு தொடர்பான இதர விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் ரூ.175, இதர அனைத்து பிரிவினரும் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் முதலில் தங்களது தகுதி பற்றிய விபரங்களை www.nats.educat ion.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2025
மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.