
சென்னை: வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நவோதயா பள்ளித் திட்டத்தின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
1992-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்தாா்.
அதன்பிறகு, வருவாய் நிா்வாக ஆணையராக பொறுப்பு வகிந்த அவா், இப்போது மத்திய அரசுப் பணியான நவோதயா பள்ளித் திட்டத்தின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.