சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: போபாலில் பிச்சையெடுக்கவும் தானம் வழங்கவும் தடை!
அப்போது அங்கு நக்சல்களினால் பொருத்தப்பட்டிருந்த ஐ.ஈ.டி எனும் நவீன வெடி குண்டை அறியாமல் மிதித்ததில் அது தூண்டப்பட்டு வெடித்து சிதறியது, இதில் பாதுகாப்புப் படையினர் 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும், அங்கு நக்சல்கள் பொருத்தியிருந்த கூர்முனை பொறியை மிதித்ததில் மற்றொரு வீரரும் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூரிலுள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க துா்கை படை! மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் வாக்குறுதி

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


