மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தனிப்பட்ட பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய அமைச்சர் ராஜிநாமா!

ஆஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்ததைப் பற்றி...

News image
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஜோ ஹைலன்
Updated On :4 பிப்ரவரி 2025, 12:48 pm

DIN

ஆஸ்திரேலியா நாட்டில் அரசினால் தனக்கு வழங்கப்பட்ட காரை தனது சொந்த பயணத்திற்கு பயன்படுத்திய விவகாரத்தில் அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜோ ஹைலன். கடந்த ஜன.25 அன்று இவர் தனக்கு அரசினால் வழங்கப்பட்ட காரையும் அதன் அரசு ஓட்டுநரையும் பயன்படுத்தி தனது நண்பர்கள் சிலருடன் சிட்னியிலிருந்து அங்குள்ள ஹண்டர் வேல்லி எனும் இடத்திற்கு தனிபட்ட ஒயின் விருந்திற்குச் சென்று திரும்பியுள்ளார்.

இதன் மூலம் 13 மணி நேரத்தில் சுமார் 446 கி.மீ. தூரத்திற்கு அவரது காரின் அரசு ஓட்டுநர் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அந்நாட்டின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ் மக்களது வரிப்பணத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு காரை அவர்கள் தனிப்பட்ட பயணங்கள் மற்றும் வேலைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்யும் சீர் திருத்தங்களை கொண்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது சொந்த பயணத்திற்காக அரசு வாகனத்தை உபயோகித்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்று தனது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை இன்று (பிப்.4) ஜோ ஹைலன் ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுயிருப்பதாவது: மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, என் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பை நான் இழந்துவிட்டேன் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறினார்.

மேலும், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் சம்மர் ஹில் தொகுதியின் அரசு உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.