கோப்புப் படம்
கோப்புப் படம்

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு!

ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்ததைப் பற்றி...
Published on

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை (பிப்.10) தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 84,598 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,890 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.27 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com