புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லியின் அடுத்த முதல்வர் தொடர்பாக...

News image

ரேகா குப்தா.

Updated On :11 பிப்ரவரி 2025, 11:12 am IST

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

தில்லி முதல்வர் யார் என்பது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

பெண் வேட்பாளர் ரேகா குப்தா

முதல்வர் போட்டியில் அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது.

இந்த நிலையில், தில்லியின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக ஜாதி மற்றும் பாலினம் போன்ற காரணிகளை சமன்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

பெண் அல்லது பட்டியலின வேட்பாளரை தில்லி முதல்வராக மத்திய பாஜக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

ரேகா குப்தாவின் பின்னணியைப் பார்க்கும்போது மாணவ பருவத்தில் இருந்து அரசியல் பயணம், கட்சியில் நடுநிலை போன்ற காரணிகளுடன் வலுவான போட்டியாளராக உள்ளார்.

ஒரு பெண் வேட்பாளரை முதல்வராக்க நினைத்தால் இவரின் வைஷ்ய சமூகப் பின்னணியும் தில்லி பல்கலைக்கழக சங்கத் தலைவராக இருந்த அனுபவமும் இவருக்கு நன்மை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் ஷாலிமார் தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியாளரை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பட்டியலின வேட்பாளர் ராஜ்குமார் செளஹான்

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பட்டியலின வேட்பாளரான ராஜ்குமார் செளஹானை தில்லி முதல்வராகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசுக்குள் ஜாதி மற்றும் சமூக பிரதிநிதித்துவத்தை சமன்படுத்த பாஜக முயலும் என்பதால் இவரை துணை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக் கூறப்படுகிறது.

தில்லி முதல்வரை பாஜக மூன்று காரணிகளை வைத்து தேர்ந்தெடுக்கும் என்று கூறப்படுகிறது. முதல் காரணி ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரை தேர்ந்தெடுப்பது, காரணம் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

இரண்டாவது பட்டியலினத்தவரை தேர்ந்தெடுப்பது, பிகாரில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு இது பயன்படும். மூன்றாவது பெண் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது பிரதமரின் பெண்கள் வளர்ச்சிக்கான திறமையான நகர்வாக இது இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.