மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

காதலர் தினத்தில் நிமிடத்துக்கு 581 சாக்லெட், 607 கேக் விற்பனை!

காதலர் தின விற்பனை குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டத் தகவல்.

Published On :

காதலர் தினத்தில் நிமிடத்துக்கு 581 சாக்லெட்டுகள் மற்றும் 607 கேக்குகள் விற்பனையானதாக ஸ்விக்கி விநியோக தளத்தின் துணை நிறுவனர் பானி கிஷான் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு காதல் நாளன்று விற்பனை குறித்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்விக்கி விநியோக தளம் வெளியிட்டத் தகவலில், பிப் 14 ஆம் தேதி காதலர் தினத்தில் நிமிடத்திற்கு 581 சாக்லெட்களும் 607 கேக்களும் விற்பனையானதாக தெரிவித்துள்ளது.

ஸ்விக்கி விநியோக தளத்தின் துணை நிறுவனர் பானி கிஷான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "காதலர் நாளன்று ஒரு நிமிடத்திற்கு 581 சாக்லெட்டுகளும், 324 ரோஜா பூக்களும் விற்பனை செய்யப்பட்டன. காதலுக்கு பங்குச் சந்தை இருந்தால் இதுதான் காளையின் ஓட்டம்.

தில்லி வாடிக்கையாளர்கள் 24 ஆர்டர்களில் 174 சாக்லெட்டுகளுக்கு ரூ. 29,844-க்கு செலவழித்தனர். இந்தாண்டு காதலர் நாள் சாக்லெட் விற்பனையானது, கடந்தாண்டைவிட இரு மடங்கு அதிகம். வழக்கமான வெள்ளிக்கிழமை விற்பனையைவிட, பிப். 14 ஆம் தேதி ஐந்து மடங்கு விற்பனையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

காதலர் நாளையொட்டி தமிழ்நாட்டிலும் பலவிதமான ரோஜாப் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

கொத்தாக ஒரே கட்டில் 20 ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து போன்ற தாஜ்மஹால் ரோஜா ரூ.500 வரையிலும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.