தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ம.பி: சிறுவனைக் கடத்திய இருவர் சுட்டுப்பிடிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் சிறுவனைக் கடத்திய இருவர் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :16 பிப்ரவரி 2025, 2:17 pm IST

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் தொழிலதிபரின் மகனைக் கடத்திய 2 பேரைக் காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குவாலியரின் மொரார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஹுல் குப்தா என்பவரின் 6 வயது மகனைக் கடந்த பிப்.13 அன்று அவரது தாய் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரது தாயின் கண்களில் மிளகாய்ப் பொடியை வீசி, சிறுவனைக் கடத்தி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கடத்தப்பட்டு சுமார் 14 மணி நேரம் கழித்து மோரேனா மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் அச்சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

இந்நிலையில், நேற்று (பிப்.15) காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மோரேனாவின் கோட்வால் அணைப் பகுதியில் சிறுவனைக் கடத்திய ராஹுல் குர்ஜார் (வயது 28) மற்றும் பண்டீ குர்ஜார் (35) ஆகியோரைத் தேடிச் சென்றனர். அப்போது, போலீஸாரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அதற்கு, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்துள்ளது.

பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது மோரேனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கடத்தலில் மேலும் இருவருக்கு தொடர்புள்ளதாக அவர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் அம்மாநில காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் ஓரு நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.