கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஹமாஸ் ஒப்படைத்த சடலம் இஸ்ரேலிய பெண்ணுடையது தான்! குடும்பத்தினர் உறுதி!

ஹமாஸ் படையினர் ஒப்படைத்த சடலமானது இஸ்ரேலிய பெண்ணுடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

ஷிரி பிபாஸ்

AP

Updated On :22 பிப்ரவரி 2025, 8:49 am

DIN

ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடமிருந்து சிறைப்பிடித்துள்ள பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு பதிலாக ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஓர் பகுதியாக ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் உயிரிழந்த இஸ்ரேலியர்களான ஷிரி பிபாஸ் (வயது 33) , அவரது இரு குழந்தைகள் மற்றும் ஓடட் லிஃப்ஷிட்ஸ் (84) என்ற ஓய்வு பெற்ற செய்தியாளா் ஆகியோரின் சடலங்கள் சா்வதேச செஞ்சிலுவைச் இயக்கத்திடம் காஸாவின் கான் யூனுஸ் நகரில் கடந்த பிப்.20 அன்று ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இஸ்ரேலில் நடத்தப்பட்ட சோதனையில் ஷிரி பிபாஸின் உடலைத் தவிர மற்ற மூவரது அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஷிரி பிபாஸின் உடலுக்கு பதிலாக உயிரிழந்த வேறொரு பாலஸ்தீனப் பெண்ணின் உடலை ஹமாஸ் படையினர் ஒப்படைத்திருப்பதாகக் இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொடூரமான மற்றும் தீங்கிழைக்கும் வகையில் மீறியதாகக் குற்றம் சாட்டியதுடன் இதற்கு அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் எனவும் அவர் சபதம் செய்தார்.

மேலும், நேற்று (பிப்.21) ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை இயக்கத்திடம் தாங்கள் ஓப்படைத்தது அப்பெண்ணுடைய சரியான உடல் தான் என்று கூறியிருந்த நிலையில் இன்று (பிப்.22) இஸ்ரேலில் நடத்தப்பட்ட அடையாளம் காணும் சோதனையில் ஒப்படைக்கப்பட்ட உடலானது ஷிரி பிபாஸினுடையது தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

இந்த விவகாரங்களுக்கு இடையில் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இன்று (பிப்.22) மற்றொரு பிணைக் கைதிகளின் குழுவானது பாலஸ்தீன சிறைவாசிகளுக்கு பதிலாக ஒப்படைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.