ஆலங்குடி குருபரிகார கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.


நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர்,ஏலவார் குழலியம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இக்கோயிலில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை குறிப்பிட்ட இடைவெளியில் நான்குகால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லப நாதர் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கொட்டையூர் அகஸ்தீஸ்வரர் கோயில், அரவூர் மங்களாம்பிகை சமேத கார்கோடகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...