‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

புத்தாண்டில் காதலை அறிவித்த தமிழும் சரஸ்வதியும் நடிகை!

தமிழும் சரஸ்வதியும் தொடர் பிரபலம் விஜே சங்கீதா, அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.

புத்தாண்டில் காதலை அறிவித்த தமிழும் சரஸ்வதியும் நடிகை!

Published On :

தமிழும் சரஸ்வதியும் தொடர் பிரபலம் விஜே சங்கீதா, அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் விஜே சங்கீதா. இவர் அழகு சீரியல் மூலம் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் மலர் பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அத்தொடரில் இருந்து விலகினார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் 'வசு' பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

விஜே சங்கீதா கனா காணும் காலங்கள் வெப் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "வாழ்க்கையைத் தொடங்குவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அரவிந்த் - விஜே சங்கீதா

அரவிந்த் - விஜே சங்கீதா

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சேஜு. இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். வெப் தொடர்கள், குறும்படங்கள் என யூடியூபில் நன்கு அறியப்பட்டவர்.

அரவிந்த் - விஜே சங்கீதா ஜோடிக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்த ராஜா வெற்றி பிரபு - தீபிகா ஜோடி முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அரவிந்த் - விஜே சங்கீதாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.