அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எனக்காக ஒரு வீடுகூட நான் கட்டியதில்லை: பிரதமர் மோடி

தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என தில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:31 am

DIN

தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என தில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தலைநகர் தில்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன. 3) தொடங்கிவைத்தார்.

அசோக் விஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,

'பிரதமர் மோடி தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நான் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கி அவர்களின் கனவை நனவாக்கியிருக்கிறேன். நான் எனக்காக மாளிகை கட்டியிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு வீடு கொடுப்பதே எனது கனவு' என்று கூறினார்.

பிரதமர் மோடி பேசும்போது தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை குறிப்பிடும்பொருட்டு மாளிகை(Sheesh Mahal) என்றார்.

தில்லி முதல்வராக இருந்தபோது கேஜரிவால், தனது அரசு பங்களாவை புதுப்பிக்க ரூ. 45 கோடி செலவழித்ததாக சர்ச்சை எழுந்தது.இதனை மறைமுகமாக விமர்சிக்க பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் விழாவில் பேசிய மோடி, 'தில்லி பேரிடரில் உள்ளது. ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளில், ஏழை மக்களுக்கான நிதியில், பள்ளி குழந்தைகளுக்கான நிதியில் அவர்கள் ஊழல் செய்து வருகிறார்கள். ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து விடுவிக்க தில்லி மக்கள் முடிவு செய்துவிட்டனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.