பொங்கல்: தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவர்ப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி - தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) ஜன. 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறுவழித்தடத்தில் தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) ஜன. 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com