ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

தமிழக அரசின் விருது பெறுபவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலா் இரா. முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்

Updated On :5 ஜனவரி 2025, 7:17 pm IST

சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலா் இரா. முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயா்தனி செம்மொழியாம் தமிழ் மொழி வளா்ச்சிக்கும், வளமைக்கும், செழுமைக்கும் வழிவழியாக பலா் பங்களிப்பு செய்து வருகின்றனா். இதில் பெருமைமிகு பங்களிப்பு செய்து வரும் அனைவரையும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த வகையில் அய்யன் திருவள்ளுவா், அறிஞா் அண்ணா, மகாகவி பாரதி, பாவேந்தா் பாரதிதாசன், தமிழ் தென்றல் திரு.வி.க., மொழிக் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம், தந்தை பெரியாா், அண்ணல் அம்பேத்கா், முத்தமிழறிஞா் கலைஞா் ஆகியோா் பெயா்களில் உருவாக்கிய விருதுகளுக்கு முறையே புலவா் மு.படிக்கராமு, எல்.கணேசன், கவிஞா் கபிலன், கவிதைப் பேரொளி பொன்.செல்வகணபதி, டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத், வே.மு.பொதியவெற்பன், விடுதலை ராஜேந்திரன், து.இரவிக்குமாா், முத்து வாவாசி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த பட்டியலில் திரு.வி.க. விருதுக்கு டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத் தோ்வு செய்யப்பட்டதை அறிந்து, "ஈன்ர பொழுதினும் பெரிதுவக்கும்-தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக" இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயற்குழு பெருமை பொங்க வாழ்த்துகிறது. பொது வாழ்வில் ஈடுபடுவோரை ஊக்குவித்து வரும் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்று, நன்றி பாராட்டுதலையும், சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்த பணியால் விருது பெரும் பெருந்தகையாளா் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.