ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

அசாம்: 2023 ஆண்டு முதல் 21 தீவிரவாதிகள் கைது!

அசாம் மாநிலத்தில் 21 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
சிறப்பு டி.ஜி.பி. ஹர்மீத் சிங்
Updated On :6 ஜனவரி 2025, 12:06 pm

DIN

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் 21 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ஹர்மீத் சிங் கூறுகையில், கடந்த 2023 முதல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட 21 தீவிரவாதிகளில் 16 பேர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் மற்றவர்கள் மாவோயிஸ்டு மற்றும் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

அவர்களிடமிருந்து, நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் மிகவும் அபாயமான நவீன வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஒன்றரை வருடத்தில், 59.41 கிலோ ஹெராயின், 3999.68 கிலோ அளவிலாப கஞ்சா மற்றும் 37,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பல போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் 1.10 கிலோ சுத்தத் தங்கம், காண்டாமிருக கொம்புகள் 2 மற்றும் 15 கால்கள், 14 யானைத் தந்தங்கள், 2 புலி பல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறப்புக் காவல் அதிரடிப் படை மேற்கொண்ட 234 நடவடிக்கைகளில் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின்போது 134 வாகனங்கள் மற்றும் 361 செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.