இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் 21 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ஹர்மீத் சிங் கூறுகையில், கடந்த 2023 முதல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட 21 தீவிரவாதிகளில் 16 பேர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் மற்றவர்கள் மாவோயிஸ்டு மற்றும் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
அவர்களிடமிருந்து, நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் மிகவும் அபாயமான நவீன வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு!
இதனைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஒன்றரை வருடத்தில், 59.41 கிலோ ஹெராயின், 3999.68 கிலோ அளவிலாப கஞ்சா மற்றும் 37,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பல போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் 1.10 கிலோ சுத்தத் தங்கம், காண்டாமிருக கொம்புகள் 2 மற்றும் 15 கால்கள், 14 யானைத் தந்தங்கள், 2 புலி பல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிறப்புக் காவல் அதிரடிப் படை மேற்கொண்ட 234 நடவடிக்கைகளில் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின்போது 134 வாகனங்கள் மற்றும் 361 செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

29 ஆண்டுகளுக்கு முந்தைய ரஜெளரி காா்டன் கொலை சம்பவம்: தேடப்பட்டவா் கைது

பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

உக்ரைனின் தாக்குதல்களில் 8,500 ரஷியர்கள் பலி! வெளியானது அதிர்ச்சி தகவல்!

கைப்பேசி கடை உரிமையாளரிடம் ரூ.97.75 லட்சம் மோசடி: ஒருவா் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



