எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சத்தீஸ்கர்: குண்டு வெடிப்பில் ஒருவர் பலி! 3 பேர் படுகாயம்!

சத்தீஸ்கரில் பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்து ஒருவர் பலியானதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜனவரி 2025, 9:35 pm IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நிறுவிய குண்டுகள் வெடித்து ஒருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாராயணப்பூர் மாவட்டத்தின் குறுஷ்னர் எனும் கிராமத்தின் இருவேறு இடங்களில் இன்று (ஜன.10) நக்சல்கள் நிறுவிய நவீன குண்டுகள் வெடித்ததில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானதுடன் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் வெடித்தது நக்சல்கள் நிறுவிய நவீன குண்டுகள் தான் என்பதை உறுதி செய்தனர்.

இதேப்போல், அந்த கிராமத்தின் ஆதர்-இடுல் சாலையில் பயங்கரவாதிகள் நிறுவிய நவீன வெடிகுண்டின் மீது கால்வைத்த சுபம் பொடியம் (வயது 20) என்ற இளைஞர், அது வெடித்ததில் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் நாரயணப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

காடுகளுக்குள் மறைந்து வாழும் நக்சல் பயங்கரவாதிகள் அப்பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் காடுகளின் பாதைகளுக்குள் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஐ.இ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகளை நிறுவிகின்றனர். இதனால், அந்த குண்டுகளுக்கு பெரும்பாலும் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்தான் பலியாகி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜன.6 அன்று நக்சல் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.