அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பெண்ணைக் கொலை செய்து கொலையாளி தற்கொலை!

கேரளத்தில் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொலை செய்த நபரைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2025, 6:30 am

DIN

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதியில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கொலையாளி தற்கொலை செய்துக் கொண்டார்.

அம்மாவட்டத்தின் விளப்பில்சாலா எனும் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 53) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஆஷா (42) ஆகிய இருவரும் தம்பனூரிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று (ஜன.11) அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆஷாவைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் விளப்பில்சால காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.12) அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களது அறையைத் திறந்து பார்த்தப்போது கைகளை கத்தியால் அறுத்துக் கொண்டு குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், அந்த அறையிலேயே ஆஷாவும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஆஷாவைக் கொலை செய்துவிட்டு குமார் தற்கொலை செய்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.