ஸ்ரீரங்கத்தில் ரௌடி வெட்டிக் கொலை: 6 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் ரௌடி கொலை தொடா்பாக 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன்-ரகுபதி
கைது செய்யப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன்-ரகுபதி
Published on
Updated on
2 min read

ஸ்ரீரங்கத்தில் ரௌடி கொலை தொடா்பாக 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜன் மகன் அன்பு (எ) அன்பரசன் (32). ரௌடியான இவா் அதே பகுதியை சோ்ந்த பிரபல ரௌடி திலீப்பின் கூட்டாளி ஆவாா். இவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இவா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பைனான்ஸ் மற்றும் கந்துவட்டி தொழிலல், கட்டப் பஞ்சாயத்துகளிலும் ஈடுபட்டு வந்த இவருக்கு பலருடன் முன் விரோதம் இருந்தது.

தினேஷ்பாபு-லோகேஷ்
தினேஷ்பாபு-லோகேஷ்

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடந்த கபடிப் போட்டி மற்றும் கோழிச் சண்டை காரணமாக, ரௌடி திலீப்பின் நெருங்கிய உறவினர், மேலூர் சாலையை சேர்ந்த தினேஷ் பாபு என்பவருடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக, தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர்களை அன்பு அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் பாபு தரப்பினர் அன்புவை வெட்டி படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தெப்பக்குளத் தெரு பகுதியில் பைக்கில் வந்த அன்புவை இரு பைக்குகளில் வந்த 4 மா்ம நபா்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அப்பகுதியினா் அவரை ஆட்டோவில் ஏற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அன்பு ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்த அன்புவின் பெற்றோா், உறவினா்கள் திரண்டு வந்து கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலையச் செய்தனா்.

மகாபிரபு-அய்யனார்
மகாபிரபு-அய்யனார்

பின்னா் இந்த கொலை தொடா்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினா் விசாரணை நடத்தி, தெப்பக்குளத் தெரு பகுதி தினேஷ் பாபு, ரகு, கோபால், அய்யனாா், லோகேஷ், மகாபிரபு ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், வடக்குவாசலை சேர்ந்த தீபக் ராகுல் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, மூன்று அரிவாள், இரண்டு பல்சர் வண்டி, ஒரு டிவிஎஸ் மேக்ஸ் வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இவர்களில், லோகேஷ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com