கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆன்லைன் மோசடியில் 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது!

நேபாளத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

நேபாளத்தில் சட்டவிரோதமான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாள காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்புகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இந்தியாவின் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் குமார் (வயது 27) மற்றும் முன்னா குமார் (36) உள்ளிட்ட 7 பேரை இன்று (ஜன.31) கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இந்த குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கணினிகள், 13 செல்போன்கள், மக்களுக்கு அவர்கள் வழங்கிய 19 காசோலைகள் மற்றும் ரூ.5,50,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க பணியைத் துறந்து நாடு திரும்புமாறு குடிமக்களுக்கு கொலம்பியா அதிபர் அழைப்பு!

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரும் ஒருங்கிணைந்து மக்களிடம் பேசி அவர்களை சட்டவிரோதமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு ஆன்லைனில் வீட்டில் இருந்தப்படியே வேலை எனக் கூறி ஏமாற்றியதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com