நேபாளத்தில் சட்டவிரோதமான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாள காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்புகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இந்தியாவின் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் குமார் (வயது 27) மற்றும் முன்னா குமார் (36) உள்ளிட்ட 7 பேரை இன்று (ஜன.31) கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இந்த குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கணினிகள், 13 செல்போன்கள், மக்களுக்கு அவர்கள் வழங்கிய 19 காசோலைகள் மற்றும் ரூ.5,50,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரும் ஒருங்கிணைந்து மக்களிடம் பேசி அவர்களை சட்டவிரோதமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு ஆன்லைனில் வீட்டில் இருந்தப்படியே வேலை எனக் கூறி ஏமாற்றியதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

வளைகுடா போர்! 4.26 லட்சம் பேர் நாடு திரும்பினர் - மத்திய அரசு அறிவிப்பு!

ஆன்லைனில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


