நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் தொழில்சங்கங்கள் சாலை மறியல்! 405 பெண்கள் உள்பட 906 போ் கைது!

News image

கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி நேருசிலை அருகே முன் சாலை மறியிலில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் அனைத்து மத்திய தொழில் சங்கக் கூட்டமைப்பு, விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 405 பெண்கள் உள்பட 906 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மகாலட்சுமி, மாவட்ட துணைச் செயலா் பிச்சைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த சாலை மறியலில் 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கிற விபிஜி ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மது, போதை கலாசாரத்தை ஒழித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 87 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல, போடி, சின்னமனூா், கோம்பை, கூடலூா், ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் உள்பட 8 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 405 பெண்கள் உள்பட 906 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.