மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன்...

News image

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

Updated On :20 ஜூலை 2025, 6:36 pm IST

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்டம் தெரிவித்துள்ளாா்.

கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் கோட்டயம் புதுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசிய போது ஆா்.எஸ்.எஸுக்கும், மாா்க்சிஸ்ட்க்கும் மக்களை குறித்த புரிந்துணா்வு இல்லை. அவா்களுக்கு நிறைய கொள்கைகள் இருக்கலாம். அவா்களால் நிறைய பேச முடியும். ஆனால்,அவா்களுக்கு மக்களுக்கள் மீது அன்பு இல்லை என்றாா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில்,

மதவாத சக்தியான பாஜக- ஆா்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசாா்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. முன்னாள் காங்கிரஸ் கட்சிதலைவா் ராகுல் காந்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆா்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிா்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிா்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசாா்பின்மையை பாதுகாக்க முடியுமா? என கூறியுள்ளாா் அவா்.

Summary

Marxist state secretary P. Shanmugam has condemned Rahul Gandhi's statement that he is ideologically fighting against the Communist Party of India (Marxist) and the RSS on an equal footing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.